Blog

Your blog category

எங்கள் கிராமம் மருதமுனை

புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் (21-08-1972 இலங்கை வானொலியில் ஒலிபரப் பப்பட்டது.) ஆங்கிலேயர் இலங்கையின் சிங்கள நாட்டைக் கைப்பற்ற முயன்ற சமயத்தில் அவர்களையும் சிங்கள மக்களுடன் சேர்ந்து எதிர்த்ததனால் சிறைப் பிடிக்கப்பட்ட முஸ்லிம் தேச பக்தர் எழுவருள் ஒருவரான அனுஸ்லெவ்வை என்பவர் பிறந்த மருதமுனையே எம்மூர். இது கிழக்கிலங்கையில் கல்முனைப் பட்டினத்துக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்திலுள்ளது. அரைச் சதுர மைல் விஸ்தீரணமுள்ள சுமார் பத்தாயிரம் மக்களைக் கொண்டுள்ள எம்மூர். இரு தெருக்களாகவும், தெருவுக்கொரு ஜூம்ஆப் பள்ளி வாசலைக் கொண்டுள்ளதாகவுமிருக்கிறது. […]

எங்கள் கிராமம் மருதமுனை Read More »

Photograph – 03

அப்துல் ரஹ்மான் ஹழ்ரமி ரஹ்மதுல்லா ஸியார நடுகைக் கல் உருப்படி எண் 000004 விபரம் 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் யெமன்-ஹழ்ரமௌதிலிருந்து மருதமுனைக்கு வருகை தந்து குடிபதியாகி வாழ்ந்து மறைந்த மெய்ஞ்ஞானி அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் ஹழ்ரமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஸியாரத்தில் பொறிக்கப்பட்டிருந்த நடுகை கல். மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பெரிய பள்ளிவாசல் புனர்நிர்மாணத்தின் போது கண்டெடுக்கப்பட்டது. மூலம்/நன்றி (Source/Credit) – ஆண்டு/திகதி 1985

Photograph – 03 Read More »

Photograph – 02

சின்னாலிமப்பா ஸியாரம் உருப்படி எண் 000003 விபரம் திருகோணமலை, சீனன் குடாவில் அமைந்துள்ள சின்னாலிமப்பா அவர்களது ஸியாரம். மூலம்/நன்றி (Source/Credit) ஆண்டு/திகதி 2023

Photograph – 02 Read More »

Photograph – 01

அல்-மனார் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருப்படி எண் 000002 விபரம் 1948-1951 மருதமுனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் (அல்-மனார் தே.பா) கடமையாற்றி 1951.05.01 ஆம் திகதி கல் எலிய அலிகார் மஹா வித்தியாலயத்திற்கு Kal Eliya Aligarh Maha Vidyalaya – National School மாற்றலாகி சென்ற தலைமையாசிரியர் அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களுடைய சேவை நலன் பாராட்டு விழாவின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். பின் வரிசை: வசந்தராசா பிள்ளை, முருகேசு,

Photograph – 01 Read More »

மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா

1995 இல் வெளிவந்த மழைக்காவியம் புத்தக அட்டைப்படம் இப்றாலெப்பை ஆலிம் என்ற ஒரு இந்தியர் மருதமுனைக்கு வந்து தங்கிவாழ்ந் திருந்தார். அவருக்கு மீராலெவ்வை என்ற ஒரு மகன் பிறந்தார். தன்னைப்போல் தன் மகனையும் ஒரு ஆலிம் ஆக்க எண்ணிய அவர் தென்னிந்தியாவில் காயல்பட்டினம் எனும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். மீராலெவ்வை மார்க்க கல்வி பயிலும் காலத்தில் தனது மாணவர்களான சேசகு அப்துல் காதர் நெய்னா லெப்பை”, “மஸ்ஹான் ஸாஹிப்” என்பவர்களுடன் தமிழையும் மிக சிறந்த முறையில் கற்றுத்

மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா Read More »

மழைக்காவியம்

வாசிக்க Download – மழைக்காவியம் (5.1 MB) புத்தக விபரம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் மருதமுனைக்கு வந்த இப்றாலெப்பை ஆலிமுக்கு மீராலெவ்வை என்ற மகன் பிறந்தார். காயல்பட்டினத்தில் மார்க்கக் கல்வி பயின்ற மீராலெவ்வை, தனது மாணவர்களுடன் தமிழையும் கற்றார். ஊர் திரும்பிய அவர் களிமடுக் கண்டத்தில் விவசாயம் செய்தார். அங்கு “ஆலிமின் பிட்டி” அவரது இருப்பிடமாக அமைந்தது. மாரி குறைந்த காலத்தில் அவர் பாடிய “மழைக்காவியம்” மூலம் மழை பெய்ததால் அவர் “சின்ன ஆலிம் அப்பா”

மழைக்காவியம் Read More »